கிழக்கு பல்கலைக்கழக வைத்தியபீட மாணவன் மஸூத் – வந்தாறுமூலையில் விபத்தில் உயிரிழப்பு.!!!
ஓட்டமாவடியைச் சேர்ந்த கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட நான்காம் வருட மாணவன் முஹம்மத் மஸூத் இன்று (24) பிற்பகல் வந்தாறுமூலையில் இடம்பெற்ற விபத்தில் மரணமடைந்தார்.
அவர் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு சென்று, ஓட்டமாவடி நோக்கி திரும்பும் வழியில் இந்த துயர சம்பவம் நேர்ந்துள்ளது.
23 வயதுடைய இவர் ஒரு பிள்ளையின் தந்தை என்பதுடன், மீராவோடையை பிறப்பிடமாகவும் ஓட்டமாவடி மர்க்கஸ் பள்ளிவாயல் வீதியை வசிப்பிடமாகவும் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மரணமடைந்தவரின் உடல் மாவடிவேம்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட உள்ளது.