நீர் நிரம்பிய குழியில் விழுந்து; 2 வயது ஆண் குழந்தை பரிதாப பலி.!!!
அரலகங்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தேகம பகுதியில் அமைந்துள்ள காணி ஒன்றில், நீர் நிரம்பியிருந்த குழியொன்றில் விழுந்து 2 வயது ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து நேற்று (20) காலை வேளையில் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த குழந்தை கந்தேகம – தம்முன்ன பிரதேசத்தைச் சேர்ந்த 2 வயதுடைய ஆண் குழந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சம்பவத்திற்குப் பின்னர் குழந்தையின் சடலம் அரலகங்வில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அரலகங்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.