27 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான; 121 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் – ஐவர் கைது.!!!
மன்னார், வங்காலை மற்றும் யாழ்ப்பாணத்தில், நெடுந்தீவு தீவுக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் கடற்படையினர் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது கேரள கஞ்சாவுடன் ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 27 மற்றும் 29 ஆம் திகதிகளில் இந்த கேரள கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போதே, 19 முதல் 56 வயதுக்குட்பட்ட 05 சந்தேக நபர்களை கடற்படை கைது செய்துள்ளது.
சுமார் 27 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான 121 கிலோகிராம் கேரள கஞ்சா மற்றும் இரண்டு டிங்கி படகுகள், கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனுடன்,தொடர்புடைய கேரள கஞ்சாவை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு டிங்கி படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.