தாய்க் கட்சியில் இணைந்தார்; முன்னாள் அமைச்சர் மெளலானா.!!!
முன்னாள் அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செய்யித் அலி ஸாஹிர் மெளலானா மீண்டும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியில் உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டுள்ளார்.
இன்று (12) கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற விஷேட நிகழ்வில் கலந்து கொண்ட அவர் தனது தாய்க்கட்சியில் இணைந்து கொண்டதுடன், அதற்கான நியமனக்கடிதத்தினையும் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து பெற்றுக்கொண்டார்.




