முன்னாள் சபாநாயகர் – அசோக ரன்வல கைது.!!!
முன்னாள் சபாநாயகரும் பாராளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல் நேற்று (11) நடைபெற்ற விபத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார். ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்தியமை மற்றும் விபத்தைத் தவிர்க்காதமை உளுளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் கூறினர்.
விபத்து சப்புகஸ்கந்த தெனிமுல்ல பகுதியில் ஜீப் வாகனம் மற்றொரு காருடன் மோதிய போது நிகழ்ந்தது. அந்த வாகனத்தில் பயணம் செய்த 25 வயது பெண், அவரது 6 மாத குழந்தை மற்றும் 55 வயது பாட்டி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
குழந்தையை சிகிச்சைக்காக லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.