நைஜீரியாவில் ஆயுததாரிகள் துப்பாக்கிச் சூடு: 50 பேர் உயிரிழப்பு.!!!
ஆப்பிரிக்க நாடான நைஜீரிய வடமேற்குப் பகுதியில் மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆயுதமேந்திய கும்பல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 50 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
தப்பியோட முயன்ற நிரபராதி மக்களை குறிவைத்து தாக்குதல்காரர்கள் சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த கொடூரமான தாக்குதல் அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
சம்பவத்திற்குப் பின்னர் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணைகளைத் தொடங்கியுள்ளதுடன், உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த மனிதாபிமானமற்ற வன்முறைச் செயல் உலக நாடுகளிடையே கடும் கண்டனத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.