ஹஜ் யாத்திரையில் ஈடுபடுவதற்கு இவர்களுக்கு அனுமதி மறுப்பதாக சவூதி அரசாங்கம் அறிவிப்பு.!!!
உலகம் முழுவதும் இருந்து இலட்சக்கணக்கான மக்கள் சவூதிக்கு ஹஜ் கடமைக்காக வருகை தருகின்றனர். இந்நிலையில் கடுமையான வெயில், கூட்ட நெரிசல் போன்ற காரணங்களால் அதிகளவான இறப்பு ஆண்டுதோறும் இடம்பெருகின்றது.
இதனை குறைக்கும் வகையிலும், ஹஜ்பாதுகாப்பு மற்றும் நெரிசலில் சிக்குவதைத் தவிர்க்கும் நோக்கிலும் ஹஜ் பயணம் மேற்கொள்வோருடன் இனிமேல் குழந்தைகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று சவூதி அரேபியா அரசாங்கம் அறிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டில், ஹஜ் புனிதப் பயணத்துக்காக வரும் மக்களுக்கான புதிய விதிமுறைகளை சவூதி அரேபியா தற்போது அறிவித்துள்ளது. உலகம் முழுவம் இலட்சக்கணக்கான மக்கள் சவூதி அரேபியாவில் உள்ள ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில், ஒவ்வொரு நாட்டுக்கும் என்று குறிப்பிட்ட எண்ணிக்கையிலான யாத்ரீகர்களுக்கு வருடம் தோறும் ஹஜ் பயணத்திற்கான அனுமதியளிக்கப்பட்டு வருகின்றது. முதன் முறையாக யாத்திரையில் பங்கேற்பதற்கு விண்ணப்பம் செய்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.