உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

ஹிஸ்புல்லாஹ்வால் ஹக்கீமுக்கு ஆரம்பித்திருக்கும் தலைமைத்துவத் தலையிடி; முஷாரப்பை முஸ்லிம் காங்கிஸில் இணைக்கக்கூடாது என பலரும் போர்க்கொடி.!!!

(ஏ.எல்.நிப்ராஸ்கான்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமைத்துவத்தில் பலருக்கும் பரவலாக அதிருப்தி நிலவி வந்தாலும் கூட அக்கட்சியின் உள்மட்டத்தில் இந்த விவகாரம் செல்வாக்கு செலுத்தாமல் இருந்துவந்த நிலையில் கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சந்தித்த பின்னடைவை அடுத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தலைவராக கிழக்கு மாகாணத்தை சேர்ந்த அக்கட்சியின் பிரதித்தலைவர்களில் ஒருவரான எம்.எல்.எம்.ஏ. ஹிஸ்புல்லாஹ் அவர்களை நியமிக்க வேண்டும் என்ற கோசம் துளிர்விட ஆரம்பித்துள்ளதாக அக்கட்ச்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அக்கட்சியின் தலைவராக இருக்கும் ரவூப் ஹக்கீமுக்கு நிகராக தலைமைத்துவத்துக்கு பொருத்தமானவர் யாருமில்லை என்ற வாதத்துடன் அக்கட்சியின் பிரமுகர்கள் தொடர்ந்தும் கடந்த காலங்களில் இருந்து வந்த நிலையில் இப்போது தலைமைத்துவ மாற்ற கோசம் எழுந்துவருகிறது. ஹிஸ்புல்லாஹ்வை தலைவராக்க உள்ளார்ந்த வேலைகள் இடம்பெறுவதை உறுதிப்படுத்தும் விதமாக உயர்பீட உறுப்பினர் ஏ.ஆர்.அமீர் அவர்கள் நேற்று பதிவொன்றை சமூக வலைத்தளங்களில் பகிரங்கமாக இட்டிருந்தார்.

அதன் தொடர்ச்சியாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இணைக்கப்பட்டால் ஹிஸ்புல்லாஹ்வை தலைவராக்க உள்ளார்ந்த வேலைகள் இடம்பெறும் என மு.காவின் முன்னிலை சமூக வலைத்தள பிரச்சார செயற்பாட்டாளர் மருதமுனை ஏ.சி.முஹம்மட் இஸ்மாயில் (Abdul Careem Muhammad Ismail) எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் ஸ்ரீ.ல.மு.காங்கிரசின் லண்டன் கிளைத்தலைவர் ஐனுதீன் கூட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் ஸ்ரீ.ல.மு. காங்கிரசில் இணைந்தால் ஹிஸ்புல்லாவை தலைமை கதிரையில் அமர்த்த திட்டம் தீட்டுவார் என்றும், மு.காவின் அழிவு ஆரம்பிக்கும் என்ற தோரணையில் சமூக வலைத்தள பதிவொன்றை பதிவேற்றியுள்ளார்.

இதேபோன்று ஸ்ரீ.ல.மு.காங்கிரசின் பிரமுகர்கள் பலரும் தமது எச்சரிக்கைகளை முன்வைத்து வருவதாகவும், ஸ்ரீ.ல.மு.காங்கிரசின் பொத்துவில் பிரதேச மத்திய குழுவினரும் கடந்த இரு தினங்களாக முன்னாள் தவிசாளர் எம்.எஸ்.எம். வாஸீத் தலைமையில் கொழும்பில் முகாமிட்டு தலைவர், செயலாளர் மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் அவர்களை ஸ்ரீ.ல.மு. காங்கிரசில் இணைக்க கூடாது என்றும் அப்படி இணைந்தால் கட்சிக்கும், கட்சித்தலைமைக்கும் முஸாரபினால் அழிவு வரும் என்றும் பிரதித்தலைவர் ஹிஸ்புல்லாஹ்வை தலைவராக்க உள்ளார்ந்த வேலைகள் முஸாரபினூடாக நடைபெறும் என்றும் எச்சரிக்கை செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அக்கட்ச்சியின் முக்கிய பிரமுகர் ஒருவர் சிலோன் பெர்ஸ்ட் நியூஸ் தளத்துக்கு தெரிவித்தார்.

கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சந்தித்த பின்னடைவை அடுத்து வரலாற்றில் என்றுமில்லாதவாறு கட்சி தலைமை எடுக்கும் தீர்மானங்கள் தொடர்ந்தும் சவலுக்குட்படுத்தப்பட்டு வருவதனால் இந்நிலை நீடித்து பலத்த சேதத்தை மு.காவுக்கு ஏற்படுத்திவிடும் என்ற அச்சநிலை உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

Total Websites Views

Total Views: 181097

Search

விளம்பரங்கள்