ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை 2025; கோப்பை இலங்கைக்கு வருகை.!!!
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை 2025 கோப்பை சுற்றுப்பயணம் இன்று கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு (RPICS) வந்துள்ளது.
இலங்கை மகளிர் அணித் தலைவர் சமரி அத்தபத்து, ஆண்கள் அணி தலைவர் தனஞ்சய டி சில்வா மற்றும் பல நட்சத்திர வீரர்களான தினேஷ் சந்திமால், விஸ்வ பெர்னாண்டோ, ஹர்ஷிதா சமரவிக்ரம, மற்றும் நிலக்ஷிகா டி சில்வா ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கோப்பையை அறிமுகப்படுத்தினர்.
ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை 2025-இன் அதிகாரப்பூர்வ சின்னங்களான Blaze மற்றும் Tonk ஆகியவை இந்த உற்சாகமான தருணத்தில் இணைந்து கொண்டன.
இலங்கையும் இந்தியாவும் இணைந்து நடத்தும் இப்போட்டியானது 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் 30 முதல் நவம்பர் 2 வரை நடைபெறவுள்ளது. இலங்கையில் வரவிருக்கும் போட்டிகளின் 11 லீக் – நிலை போட்டிகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






