ஐஸ் மற்றும் கேரள கஞ்சாவுடன் – இருவர் கைது.!!!
இராணுவப் புலனாய்வுப்பிரிவினருக்கு கிடைத்த இரகசியத்தகவலுக்கமைய வாழைச்சேனை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி எஸ்.எல்.லசந்த பண்டாரவின் வழிகாட்டல், ஆலோசனையில் பொலிஸ் நிலைய போதைத்தடுப்பு பிரிவினரால் நாவலடி மற்றும் ஓட்டமாவடி பிரதேசங்களில் வைத்து நேற்றிரவு 9 மணியளவில் வெளிப்பிரதேசங்களைச்சேர்ந்த இருவர் கைது செய்யட்டுளள்ளனர்.
திருகோணமலை தோப்பூரைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞன் 5,650 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நாவலடி பிரதேசத்திலும் 100 கிராம் கேரள கஞ்சாவுடன் பொலன்னறுவையைச் சேர்ந்த 32 வயது இளைஞன் ஓட்டமாவடியிலும் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் வாழைச்சேனை பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், சந்தேக நபர்களையும் சான்றுப்பொருட்களையும் மேலதிக சட்டநடவடிக்கைக்காக நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.