உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 12, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் – ரூ. 1.5 மில்லியன் மதிப்புள்ள நகை திருட்டு.!!!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மீன்பிடி இலாகா வீதி, வாழைச்சேனை பகுதியில் அமைந்துள்ள வீட்டில் இன்று (18) அதிகாலை பெரும் நகை திருட்டுச் சம்பவம் நடந்தது.

ஓட்டமாவடி ஜும்ஆப் பள்ளிவாயலில் பேஷ் இமாமாகக் கடமையாற்றும் அஸ்லம் நஹ்ஜி தனது சுபஹ் தொழுகைக்காக வீட்டில் இல்லாத வேளையில், இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சமீப காலமாக இப்பிரதேசத்தில் திருடர்களின் கைவரிசை அதிகரித்துள்ள நிலையில், இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருட்டுச்சம்பத்தில் சுமார் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள நகைகள் திருடப்பட்டுள்ளன. திருடப்பட்ட நகைகள் விற்பனைக்கு வந்தால் அல்லது காணப்பட்டால், தயவுசெய்து +94 75 603 3386 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700101

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time