ஈரான் கடற்படை போர்க்கப்பல் மூழ்கியது: 80 பேர் உயிரிழப்பு – 32 பேர் உயிருடன் மீட்பு.!!!
இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சம்பவத்தில் ஈரானின் போர்க்கப்பல் ஒன்று நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஷெத் உறுதிப்படுத்தியதாக கூறப்படுகிறது.
சம்பவத்தைத் தொடர்ந்து இலங்கையின் காலி கடற்பரப்பிற்கு அருகில் அவசர மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
தகவல்களின் படி, கப்பலில் இருந்தவர்களில் 80 ஈரானிய கடற்படையினர் உயிரிழந்துள்ளனர். மேலும் 32 பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலால் ஒரு போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டது எனக் கருதப்படும் அரிதான சம்பவங்களில் இதுவும் ஒன்றாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிகழ்வு சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், பிராந்திய பாதுகாப்பு நிலைமை குறித்து கவலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

