காத்தான்குடி–பொலன்னறுவை பேருந்து லொறியுடன் மோதி புனானையில் விபத்து – எவருக்கும் பாதிப்பில்லை.!!!
காத்தான்குடியிலிருந்து பொலன்னறுவை நோக்கி பயணித்த பேருந்து மற்றும் பொலன்னறுவையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த லொறி ஆகியவை இன்று (18) காலை புனானை பகுதியில் நேருக்கு நேர் மோதியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தில் இரு வாகனங்களும் கடுமையாக சேதமடைந்துள்ள போதிலும், பயணிகள் மற்றும் சாரதிகள் எவருக்கும் உடல்நலப் பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழையுடனான வானிலை நிலவி வருவதும், சாலைகள் ஈரப்பதமாக காணப்பட்டதும் விபத்திற்கான காரணமாக இருக்கலாம் என ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.