காத்தான்குடி ஹிஸ்புழ்ழாஹ் விளையாட்டு மைதானம்; விரைவில் அபிவிருத்தி செய்யப்படும் – கலீல் பாரி.!!!
காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் பொது விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்திப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எம்.எப். எம். கலீல் பாரி தெரிவித்தார்.
இது தொடர்பாக, அவர் தலைமையிலான குழுவினர் மைதானத்தை நேரில் சென்று பார்வையிட்டதுடன், காத்தான்குடி விளையாட்டுக் கழகங்களுடன் கலந்துரையாடலையும் மேற்கொண்டனர்.
இதன்போது, மைதானத்தை பயன்படுத்தும் விளையாட்டுக் கழகங்கள் எதிர்கொள்கின்ற சவால்கள் மற்றும் தற்போதுள்ள நிலைமை தொடர்பாகவும் ஆய்வு செய்யப்பட்டது.
இவ்வேளையில், மைதான அபிவிருத்தி, ஆடுகளத்தை செப்பனிடல் மற்றும் நிரந்தர தீர்வுகளை வழங்கும் வகையில் தேவையான திட்டங்கள் எடுக்கப்பட வேண்டும் என்ற முடிவுக்கு வந்ததாக கலீல் பாரி தெரிவித்தார்.
அத்துடன், எதிர்வரும் நாட்களில் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் மேலதிக கலந்துரையாடல்களில் ஈடுபட்டு, துரிதமான அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வேலைத்திட்டங்கள் தயாராகின்றன என்றும் அவர் கூறினார்.



