மத்திய கிழக்கு பதற்றம்: இலங்கையர்களுக்கு அவசர வழிகாட்டல் – 24 மணிநேர செயற்பாட்டு மையம் நிறுவப்பட்டது.!!!
மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது நிலவும் பதற்றமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அங்குள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் நிலைமை குறித்து வெளிநாட்டு அமைச்சு தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.
அந்தந்த நாட்டின் அரசாங்கங்கள் வழங்கும் அறிவுறுத்தல்கள் மற்றும் இலங்கைத் தூதரகங்கள் வழங்கும் வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றுமாறு அங்குள்ள இலங்கையர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இச்சூழ்நிலையை முன்னிட்டு, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் 24 மணிநேரமும் செயல்படும் அவசர செயற்பாட்டு மையம் நிறுவப்பட்டுள்ளது. ஏதேனும் அவசர தேவைகள் ஏற்பட்டால் கீழ்க்காணும் தொலைபேசி இலக்கங்கள் மூலம் தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்பு விபரங்கள்:
WhatsApp / Imo: +94 71 980 2822
துரித அழைப்பிலக்கம் (Hotline): 1989
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு