ஒலுவில் களியோடை ஆற்றின் அருகில்; கைவிடப்பட்ட நிலையில் பிறந்த குழந்தை கண்டெடுப்பு.!!!
(இசட். இம்தாத் ஹுசைன்)
ஒலுவில் களியோடை ஆற்றின் அருகில் பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று இன்று (28) காலை மீன்பிடியில் ஈடுபட்ட நபர் ஒருவரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இனம் தெரியாத நபரினால் கைவிடப்பட்ட நிலையில் இருந்த அக் குழந்தை, காலை 9.30 மணியளவில் ஒலுவில் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளது.
தற்போது அக் குழந்தை ஆரோக்கியமான நிலையில் உள்ளதாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.