ரஷ்யத் தூதுவர் – ஜனாதிபதி செயலாளர் சந்திப்பு: இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடல்.!!!
இலங்கைக்கான ரஷ்யக் கூட்டமைப்பின் தூதுவர் லெவன் எஸ். ஜாகர்யான் இன்று (25) ஜனாதிபதி அலுவலகத்தில் நந்தி சனத் குமாந்யக்கவை சந்தித்தார்.
இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது. இரு நாடுகளையும் பாதிக்கும் பொதுவான விடயங்கள் குறித்தும் கருத்துகள் பரிமாறப்பட்டன.
மேலும், சுற்றுலா, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் இலங்கை மற்றும் மாலைத்தீவுகளில் உள்ள ரஷ்யத் தூதரகத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் ஜெர்மன் பெடரோவ் மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே ஆகியோரும் கலந்து கொண்டனர்.
