குடிசை வீடு தீப்பிடித்து சாம்பல் – குடும்பம் துயரத்தில்.!!!
(எச். எம். எம். பர்ஸான்)
மட்டக்களப்பு மாவட்டம் சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோரகல்லிமடு பிள்ளையார் கோயில் வீதியிலுள்ள குடிசை வீடொன்று சனிக்கிழமை (11) மாலை தீப்பிடித்து சாம்பலாகிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வீட்டில் பயன்படுத்திய எரிவாயு கசிவு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என ஆரம்பிககக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தில் குடிசை வீடும் அதனுள் இருந்த வீட்டு உபகரணங்களும் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளன.
இந்நிலையில், சம்பவ இடத்திற்குச் சென்ற வாழைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் தற்போதைய உறுப்பினருமான கே. கமலநேசன், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி, உலர் உணவுப் பொருட்களை வழங்கினார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
