மட்டக்களப்பு-கல்முனை நெடுஞ்சாலையில்: விஷேட சோதனை நடவடிக்கை.!!!
(ஜே.கே)
பொலிஸ்மா அதிபரின் பணிப்புரையின் கீழ், மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்னவின் வழிகாட்டலில் காத்தான்குடி பொலிஸ் பிரிவில் இன்று (26) விஷேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கா தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றச்செயல்களில் தடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்நடவடிக்கைகள் இடம் பெற்றன.
காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்திகாரி ஐ.பி.அழகோனின் ஆலோசனையின் கீழ் மட்டக்களப்பு-கல்முனை நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள், முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் இதன்போது சோதனையிடப்பட்டன.


