சிரியாவில் வெடித்தது உள்நாட்டு கலவரம்; ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலி.!!!
சிரியாவில் இரண்டு நாட்களாக நடந்த உள்நாட்டு கலவரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
உள்நாட்டு கிளர்ச்சி மத்திய கிழக்கு நாடான சிரியாவில் (Syria) முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-ஆசாத், ரஷ்யா மற்றும் ஈரானுக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அமெரிக்கா, துருக்கி ஆகிய நாடுகள் அவருக்கு எதிராக உள்நாட்டு கிளர்ச்சி படைகளை தூண்டிவிட்டன.
புதிதாக உருவான கிளர்ச்சிப்படை தலைநகர் டமாஸ்கஸ் உட்பட முக்கிய நகரங்களைக் கைப்பற்றியது.
இதனைத் தொடர்ந்து, பஷார் அல் ஆசாத் ரஷ்யாவில் தஞ்சமடைய, சிரியாவின் இடைக்கால ஜனாதிபதியாக கிளர்ச்சிப்படையைச் சேர்ந்த அஹ்மத் அல்-ஷரா பொறுப்பேற்றார்.




