தேசபந்து பிணையில் விடுதலை; கடும் நிபந்தனை விதிப்பு.!!!
விளக்கறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பொலீஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று மாத்தறை நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதை அடுத்து பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இரண்டு 10 இலட்சம் ரூபாய் சரீரம் பிணைகளில் இவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அத்துடன் இவ்வழக்கின் சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்க கூடாது என்ற கடும் நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது
மாத்தறை W15 ஹோட்டலில் இடம் பெற்றதாக கூறப்படும் துப்பாக்கி சம்பவம் மற்றும் கொலை சம்பவங்கள் இடம்பெற்ற சம்பவங்களை அடுத்து இவர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.