கொழும்பு ரயிலுடன் மோதிய முச்சக்கர வண்டி; சாரதி பலி.!!!
வல்பொல ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள ரயில் கடவையில் இன்று (03) காலை துயரச்சம்பவம் ஒன்று இடம்பெற்றது.
மட்டக்களப்பிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற புலத்திசி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில், முச்சக்கர வண்டியொன்று மோதியதில் விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில், முச்சக்கர வண்டி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், பின் இருக்கையில் பயணித்திருந்த இரண்டு பெண்கள் கடுமையாக காயமடைந்த நிலையில் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து முச்சக்கரவண்டி சாரதியின் கவனக்குறைவால் ஏற்பட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


