70 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்புடன்; இருவர் பொலிசாரால் கைது – பரள்களும் மீட்பு.!!!
(ஜே.கே)
மட்டக்களப்பு ஆயித்தியமலை பொலிஸ் பிரிவுக்குபட்ட உன்னிச்சை குளத்துக்கு அருகில் வைத்து
70 ஆயிரம் மில்லி லீற்றர் சட்டவிரோத மதுபானம் கசிப்பபுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்தாக ஆயித்தியமலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.எம்.இக்பால் தெரிவித்தார்.
நேற்று (06) மாலை ஆயித்தியமலை பொலிசார் மேற்கொண்ட திடீர் தேடுதலின்போதே சட்டவிரோத கசிப்புடன் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பொலிசார் மேற்கொண்ட விசாரணையின் பின்னர் மதுபான உற்பத்திக்கு பயன்படுத்தப்படுத்திய இரண்டு வெற்று பரல்களும் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
ஆயித்தியமலை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


