வவுனியாவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காரில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு –
காத்தான்குடி பொலிஸ் பிரிவைச் சேர்ந்தவர்களென அடையாளம்.!!!
வவுனியாவில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட காரிலிருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் இருந்து காத்தான்குடி நோக்கி பயணித்த காரொன்று வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அதிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் ஆரையம்பதியை சேர்ந்த பொது சுகாதார பரிசோதகர் செனவிரட்ன மற்றும் காத்தான்குடி தெற்கு எல்லை வீதியைச் சேர்ந்த பெண் ஒருவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளன:
இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். மீட்கப்பட்ட இரு சடலங்களும் தற்போது வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.