வாழைச்சேனை பொலிஸ் பிரிவில்; போதைப்பொருட்களுடன் – பெண் உட்பட இருவர் கைது.!!!
போதைப்பொருள் வியாபாரிகள் என சந்தேகிக்கப்படும் பெண் உட்பட இருவர் மட்டக்களப்பு வாழைச்சேனையிலுள்ள அவரது வர்த்தக நிலையத்தில் வைத்து நேற்று (24) வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாழைச்சேனை பிறைந்துரைச்சேனை, 2ம் குறுக்கு வீதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் நாவலடி பிரதேசத்திலும் மாவடிச்சேனை, பசீர் வீதியைச் சேர்ந்த 37 வயதுடைய ஆண் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெண் சந்தேக நபரிடமிருந்து 13 இலட்சத்து 2,650 ரூபா பணமும் ஹெரோயின் போதைப்பொருள் 5,750 மில்லி கிராம், கண்காணிப்பு கமெரா சேமிப்பகம் (டி.வி.ஆர்) என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், குறித்த ஆண் சந்தேக நபரிடமிருந்து ஐஸ் போதைப்பொருள் 5, 670 மில்லி கிராம் கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திரு லசந்த பண்டார தெரிவித்தார்.