உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 12, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

விசேட தேடுதல் நடவடிக்கையில்; 5 கைக்குண்டுகள் மற்றும் ஆயுதப் பாகங்கள் – பொலிசாரினால் மீட்பு.!!!

(தில்சாத் பர்வீஸ்)

அம்பாறை மாவட்டம், திருக்கோயில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வம்மியடி பகுதியில் இருந்து 5 கைக்குண்டுகள் மற்றும் ஆயுதங்களின் உறுதிப் பாகங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் இன்று (09) சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

அம்பாறை மாவட்ட அரச புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, வம்மியடி பகுதியின் ஊடாக செல்லும் பரந்த ஆற்றுப் பகுதியில் காணப்படும் மரம் ஒன்றின் அடிப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 5 கைக்குண்டுகள் மற்றும் ஆயுதங்களின் உறுதிப் பாகங்கள் சிலவற்றை பொலிசார் மீட்டுள்ளனர்.

மேலும், குறித்த இடத்தில் விடுதலைப் புலிகளின் முகாம் இருந்ததாகவும், மேலும் பல ஆயுதங்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பொலிசார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் திருக்கோயில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றன.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700332

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time