பெண் மர்மமான முறையில் தூக்கிட்டு உயிரிழப்பு; பொலிஸார் தீவிர விசாரணை.!!!
திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள இளக்கந்தை பகுதியில் 63 வயதுடைய பெண் ஒருவர் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் இன்று (24) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் பாட்டாளிபுரம், இளக்கந்தை பகுதியைச் சேர்ந்தவரென அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்துக்கு சென்ற சம்பூர் பொலிஸாரும், மூதூர் திடீர் மரண விசாரணை அதிகாரியும் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
சடலம் மூதூர் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்தில் பெண் தூக்கிட்டு உயிரிழந்ததற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், சம்பூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

