பேரூந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; இளைஞன் பலி.!!!
ஹொரவ்பொத்தானை பிரதான வீதியின் 10 கட்டை பகுதியில் இன்று (13) இடம்பெற்ற துயரமான சாலை விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.
மஹதிவுல்வெவ பகுதியில் இருந்து தம்பலகாமம் நோக்கி பயணித்த ஆடை தொழிற்சாலை பஸ் ஒன்றுடன், எதிர்திசையில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் கபுகொல்லாவ – ஆனவிழுந்தான் பகுதியைச் சேர்ந்த 19 வயதான எஹியா உல்முதீன் சஹீல் அஹமட் என்பவர் பலியாகியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம், திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.