மட்டக்களப்பு – ஏறாவூர் பிரதான வீதியில் விபத்து: சைக்கிளில் சென்றவர் பலி – சாரதி கைது.!!!
மட்டக்களப்பு – ஏறாவூர் பிரதான வீதியில் நவாஸ் பேக்கரிக்கு அருகில் இன்று (25) காலை இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூரைச் சேர்ந்த 84 வயதுடைய அலியார் ஜமால்தீன் என்பவரே உயிரிழந்தவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
காலை பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு தனது சைக்கிளில் வீதியைக் கடக்க முற்பட்டபோது, மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் அதிவேகமாக பயணித்த எல்ப் ரக வாகனம் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மோதிய தாக்கத்தில் முதியவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு போதனா வைத்திசாலையின் திடீர் மரண விசாரணையதிகாரி நசீர் சம்பவ இடத்திற்கு சென்று ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற்கொண்டார்.
விபத்தில் தொடர்புடைய எல்ப் ரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.