துபாயிலிருந்து வந்த சரக்கு விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது – இருவர் உயிரிழப்பு.!!!
சீனா துபாயிலிருந்து வந்த போயிங் 747 சரக்கு விமானம் சீனாவின் ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது பயங்கர விபத்தில் சிக்கியது.
தரையிறங்கும் தருணத்தில் கட்டுப்பாட்டை இழந்த விமானம், ஓடுபாதையிலிருந்து கடலில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், விமானத்தில் இருந்த மற்ற நால்வரில் நான்கு பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
விபத்தில் சிக்கிய விமானம் எமிரேட்ஸ் விமான நிறுவனத்திற்குச் சொந்தமானது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானத்தில் சரக்குகள் எதுவும் இல்லாததாகவும், விபத்திற்கான காரணம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
விமான நிலைய அதிகாரிகளின் தகவலின்படி, இந்த விமானம் 32 ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்தது. இது முதலில் பயணிகள் விமானமாக இருந்ததோடு, பின்னர் சரக்கு விமானமாக மாற்றப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.




