எரிபொருள் விலைகளில் திருத்தம்: இன்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்.!!!
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
அதன்படி, லங்கா டீசல் ரூ.4 அதிகரிக்கப்பட்டு ரூ.281 ஆக விற்பனை செய்யப்படவுள்ளது.
அத்துடன், லங்கா சுப்பர் டீசல் ரூ.6 அதிகரிக்கப்பட்டு ரூ.329 ஆக விற்பனை செய்யப்படவுள்ளது.
மேலும், ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ரூ.1 அதிகரிக்கப்பட்டு ரூ.293 ஆக விற்பனை செய்யப்படவுள்ளது.
எனினும், ஒக்டேன் 95 ரக பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒக்டேன் 95 ரக பெட்ரோல் ரூ.340 க்கும், மண்ணெண்ணெய் ரூ.182 க்கும் அதே விலையில் தொடர்ந்தும் விற்பனை செய்யப்படவுள்ளது.
