கிராம உத்தியோகத்தர் – ஐஸ் போதைப்பொருளுடன் கைது.!!!
மீரிகம பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்ததாகக் கூறப்படும் கிராம உத்தியோகத்தர் ஒருவர், மீரிகம பொலிஸாரால் நேற்று (24) இரவு கைது செய்யப்பட்டார்.
மீரிகம பொலிஸாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் ஹலுகம பகுதியில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில், சந்தேக நபர் கைதானார். நெலிகம–மீரிகம பிரதேசத்தைச் சேர்ந்த இவர், அரசாங்க சேவையில் கிராம உத்தியோகத்தராக பணியாற்றி வந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
கைதான உத்தியோகத்தர் போதைப்பொருள் கடத்தல் வட்டாரத்துடன் தொடர்புடையவர் எனவும், அதற்கான மேலும் பல தகவல்கள் பொலிஸாரின் விசாரணைகளில் வெளிப்பட்டுவருவதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மீரிகம பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.