ஹமாஸ் ஆர்.பி.ஜி தாக்குதல் – இஸ்ரேல் உயர் கமாண்டர் பலி; காசாவில் போரின் தீவிரம் அதிகரிப்பு.!!!
இஸ்ரேல் ராணுவம் கடந்த 11ஆம் திகதி முதல் காசாவின் பல பகுதிகளில் தரைவழித் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இதனால் இதுவரை 1000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், ஹமாஸ் ராணுவ பிரிவான அல்-கஸ்ஸாம் பிரிகேட்ஸ் மற்றும் பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் இயக்கத்தின் அல்-குட்ஸ் பிரிகேட்ஸ் ஆகியவை இஸ்ரேல் படையினருக்கு கடும் எதிர்ப்பை வழங்கி வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு, கான் யூனிஸ் நகரின் தெற்குப் பகுதியில் இஸ்ரேலிய படைகளை நோக்கி ராக்கெட்டுகள் ஏவப்பட்டன. அதேவேளை, மத்திய காசாவில் இஸ்ரேல் ராணுவ வாகனம் அழிக்கப்பட்டதாக அல்-குட்ஸ் பிரிகேட்ஸ் உறுதிப்படுத்தியது.
இந்தத் தாக்குதல்களின் பின்னணியில், இஸ்ரேல் தனது தரைவழித் தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. எனினும், கடுமையான பின்னடைவுகளையும் சந்தித்து வருகிறது. அதன் உச்சமாக, ஹமாஸ் போராளிகள் நடத்திய ஆர்.பி.ஜி தாக்குதலில் இஸ்ரேலிய உயர் கமாண்டர் ஒருவர் உயிரிழந்ததை இஸ்ரேல் இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
அதன்படி, இஸ்ரேல் ராணுவத்தின் 7வது கவசப் படையின் 77வது பட்டாலியன் நிறுவனத் தளபதி மேஜர் ஷாஹர் நெடானெல் போசக்லோ, ஹமாஸ் படைகளுக்கு எதிராக டேங்க் மூலம் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தபோது, ஹமாஸ் போராளி ஒருவர் நடத்திய ஆர்.பி.ஜி தாக்குதலில் பலத்த காயமடைந்தார்.
உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த வாரம் காசாவில் தொடங்கிய இந்தப் போரில், இஸ்ரேல் தரப்பில் அதிகாரப்பூர்வமாக உயிரிழந்த முதல் உயர் அதிகாரி இவராக இருப்பதாகவும், இந்நிகழ்வு பாலஸ்தீனத்துக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.