காசாவில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய 25 நாள் குழந்தை; 25 நாட்களின் பின் – உயிருடன் மீட்பு.!!!
காசாவில் இடிபாடுகளில் இருந்து 25 நாள் குழந்தை நேற்று (20) மீட்கப்பட்டது. இடிந்து விழுந்த கட்டிடத்தின் எச்சங்களைத் தோண்டிய மீட்புப் பணியாளர்கள், குழந்தையின் அழுகை சத்தத்தைக் கேட்டனர்.
விடியற்காலையில் இருந்து அவள் இடிபாடுகளுக்கு அடியில் இருந்தாள், அவளை வெளியே எடுக்கும்வரை அவ்வப்போது கத்திக் கொண்டிருந்தாள், பின் அமைதியாக இருந்தாள், அவள் பாதுகாப்பாக இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்”.
அந்தப் பெண் குழந்தை எல்லா ஒசாமா அபு டாக்கா என்று அடையாளம் காணப்பட்டது. 25 நாட்களுக்கு முன் போர் நிறுத்தத்தின் போது பிறந்தது. சிறுமியின் தாத்தா பாட்டி மட்டுமே தாக்குதலில் இருந்து தப்பினர். தந்தை, அவரது 7 குழந்தைகள் உட்பட மற்றொரு குடும்பமும் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.