காத்தான்குடி வாவியில் மிதக்கும் படகு சவாரிக்கு நான் தான் அனுமதி வழங்கினேன் – பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு.!!!
(எம் எஸ் எம் நூர்தீன்)
காத்தான்குடி நகர சபை உறுப்பினர் றுஸ்வின் L.L.B மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான கந்தசாமி பிரபு அவர்களிடம் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கூட்டப்பட்டல் வேண்டும் என விடுத்த வேண்டுகோள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்களை தொடர்பு கொண்டு கேட்டேன்.
அதற்கு அவர் இவ்வாறு பதிலளித்தார் அதாவது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உரிய காலத்துக்கே அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள் நடாத்தப்பட்டுள்ளன.
அபிவிருத்தி திட்டங்களுக்கு உரிய முன் அனுமதியை பிரதேச செயலாளருக்கு வழங்கியுள்ளேன்.
அதற்கு உதாரணமாக காத்தான்குடி வாவியில் மிதக்கும் படகு செயற்பாட்டிற்கு முன் அனுமதியை வழங்கியுள்ளேன்.
நான் அனுமதி வழங்க தேவையான பட்சத்தில் பிரதேச செயலாளர் கோரும் நிலையில் நான் முன் அனுமதியை அபிவிருத்தி வேலைத் திட்டங்களுக்காக வழங்குவேன் என கூறினார்