“எனது உயிருக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பொறுப்பு” – அப்துர் றஊப் மௌலவி விசேட அறிக்கை.!!!
நான் எங்கு, எப்போது கொலை செய்யப்பட்டாலும் எனது கொலைக்குக் காரணமானவர்கள் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைவரும், அதன் உறுப்பினர்களுமேயாவர்.
இலங்கைத் திரு நாட்டின் கௌரவ ஜனாதிபதி அவர்களுக்கும், மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களுக்கும், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், நீதிபதிகள், சட்டத்தரணிகள் அனைவருக்கும், இதன் கீழ் ஒப்பமிடும் நான் எங்கு, எப்போது கொலை செய்யப்பட்டாலும் எனது கொலைக்குக் காரணமானவர்கள் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைவரும், அதன் உறுப்பினர்களுமேயாவர்.
எனது இத்தகவலுக்கு ஆதாரம் உலமா சபை எனது மத உரிமைகளை மீறி எனக்கு எதிராக வழங்கிய “பத்வா” தீரப்பேயாகும்.
அவர்கள் எனக்கு எதிராக வழங்கிய “பத்வா” புத்தகம் 20ம் பக்கத்தில் கூறப்பட்ட விடயங்களும், கொலை அச்சுறுத்தலுமாகும்.
மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ காத்தான்குடி.

