ஹோர்முஸ் நீரிணையில்: மூன்று தாய்லாந்து சரக்குக் கப்பல்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்.!!!
ஹோர்முஸ் நீரிணையில் இன்று (11) அடையாளம் தெரியாத ஏவுகணைகள் மூலம் தாக்குதலுக்குள்ளானதில் மூன்று வணிகக் கப்பல்கள் சேதமடைந்துள்ளன.
இந்தச் சம்பவத்தில் தாய்லாந்து நாட்டுக்குச் சொந்தமான ‘மயூரி நாரி’ (Mayuree Naree) என்ற சரக்குக் கப்பலில் பாரிய தீ விபத்து ஏற்பட்டது. கப்பலில் இருந்த பணியாளர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
ஓமனுக்கு வடக்கே சுமார் 11 கடல் மைல் தொலைவில் பயணம் செய்யும் போது ‘மயூரி நாரி’ கப்பலை இந்த தாக்குதல் பாதித்தது. தாக்குதலால் கப்பலில் தீப்பிடித்ததையடுத்து, 23 பணியாளர்களில் 20 பேரை ஓமன் கடற்படையினர் மீட்டுள்ளனர்.
மீதமுள்ள 3 பணியாளர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இத்தகவலைப் பற்றி ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் (UKMTO) வெளியிட்ட அறிக்கையில், “கப்பலில் ஏற்பட்ட தீ தற்போது முழுமையாக அணைக்கப்பட்டு, சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை” என்று உறுதிப்படுத்தியுள்ளது.

