ஈரான் உச்ச தலைவர் ஆயத்துல்லா செய்யது அலி காமேனி தாக்குதலில் உயிரிழப்பு: IRGC உறுதிப்படுத்தல்.!!!
ஈரானிய குடியரசுக்கு எதிரானதாகக் கூறப்படும் அமெரிக்க–இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு தாக்குதலில், இஸ்லாமியப் புரட்சியின் உயரிய தலைவர் ஆயத்துல்லா செய்யது அலி காமேனி வீரமரணம் அடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இல்லம் குறிவைத்து தாக்குதல்
சனிக்கிழமை காலை தெஹ்ரான் நகரில் அமைந்திருந்த அவரது இல்லம் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் அவரது மகள், மருமகன், மருமகள் மற்றும் பேரன் உள்ளிட்ட பல குடும்ப உறுப்பினர்களும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
அவரது வீரமரணத்தைத் தொடர்ந்து, இஸ்லாமியப் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரானிய தேசம் ஒரு மாபெரும் தலைவரை இழந்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில்,
“ஆன்மத் தூய்மை, நம்பிக்கையின் வலிமை, விவேகம், ஆணவ சக்திகளுக்கு எதிரான துணிச்சல் மற்றும் இறைவழியில் பாடுபடுதல் ஆகியவற்றில் அவர் தனது காலத்தில் இணையற்றவராகத் திகழ்ந்தார்” என பாராட்டப்பட்டுள்ளது.
“மனிதகுலத்தின் கொலையாளிகளின் கைகளால் அவர் வீரமரணம் அடைந்தது, அவரது நேர்மைக்கும் இறைவழிச் சேவைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கும் அடையாளமாகும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாம் மற்றும் மாபெரும் ஈரானின் பாதையில் வீரமரணம் அடைவது “வெற்றியின் அடையாளம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன்,
“இமாம் காமேனி இறைவனிடம் மீண்ட போதிலும், அவரது பாதையும் மரபும் முற்றுப்பெறாது; அது மேலும் வலிமையுடனும் கம்பீரத்துடனும் தொடரும்”
என்று IRGC வலியுறுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மேலும் பதற்றத்தை உருவாக்கக்கூடும் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.







