உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

காத்தான்குடி பாலர்களின் முன்மாதிரியான; ஹஜ்ஜூப் பெருநாள் கொண்டாட்ட நிகழ்வு.!!!

(எம்.பஹத் ஜுனைட்)

நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவூட்டும் வண்ணம் புனித ஹஜ்ஜூப் பெருநாள் நிகழ்வு காத்தான்குடி நகரசபையின் கீழ் இயங்கிவரும் முன்மாதிரி பாலர் பாடசாலையும் பொது நூலகமும் இணைந்து பொது நூலக சிறுவர் பகுதியில் திங்கட்கிழமை ( 09) நடாத்தப்பட்டது.

நகரசபை செயலாளர் திருமதி றிப்கா ஷபீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் தியாகம் மற்றும் புனித கஃபா கட்டப்பட்ட வரலாறு தொடர்பான காணொளிகள் மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டதோடு மாணவர்களுக்கு நினைவுச்சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நகரசபையின் நிர்வாக உத்தியோகத்தர், நூலகர் மற்றும் நகரசபை உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது .

Related News

Total Websites Views

Total Views: 198606

Search

விளம்பரங்கள்