பெருமளவிலான ‘ஐஸ்’ மற்றும் ஹெரோயின் – போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது.!!!
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வியாழக்கிழமை (13) நடைபெற்ற விசேட சோதனை நடவடிக்கையின் போது, குற்றவியல் புலனாய்வுப் பிரிவு (CID) அதிகாரிகள் குழுவினால் பெருமளவிலான போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சோதனை நடவடிக்கையின் போது, 287 கிராம் ஹெரோயின், 650 கிராம் அளவிலான ஹெரோயின் கலவைகள், 168 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மற்றும் 480 கிராம் 480 மி.கி. போதைப்பொருட்களும் சந்தேக நபரிடம் இருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் உடுபத்தாவைச் சேர்ந்த 32 வயதுடைய ஆண் எனப் பொலிஸ் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் குளியாப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு ஒப்படைக்கப்பட்ட நிலையில், மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.