காத்தான்குடி மீராபாலிகா மாணவிகள் – தேசியமட்ட மகளிர் கிரிக்கெட் பயிற்சி நெறிக்கு தெரிவு.!!!
சர்வதேச கிரிக்கெட் பேரவையும் (ICC) ஐக்கிய நாடுகள் சர்வதேச சிறுவர் நிதியமும் (யுனிசெப்) இணைந்து ஏற்பாடு செய்யும் தேசியமட்ட மகளிர் கிரிக்கெட் பயிற்சி நெறிக்கு காத்தான்குடி மீராபாலிகா மகா வித்தியாலய மாணவிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையின் தெரிவு செய்யப்பட்ட சில பாடசாலைகள் இப்பயிற்சி நெறியில் பங்கேற்கும் நிலையில், காத்தான்குடி மீராபாலிகா மகா வித்தியாலயமும் அதில் இடம்பெற்றிருப்பது பெருமைக்குரியதாகும்.
மேற்படி பயிற்சி நெறிக்காக, A.S.F. ஹனா மற்றும் M.A. செய்னப் ஆகிய மாணவிகள் நாளை (11) கொழும்பு நோக்கி பயணமாகின்றனர்.
இப்பயிற்சிகளை இலங்கை மகளிர் தேசிய கிரிக்கெட் அணியும் மற்றும் பாகிஸ்தான் மகளிர் தேசிய கிரிக்கெட் அணியும் வழங்கவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தேர்வு, காத்தான்குடி பிராந்தியத்தில் மகளிர் விளையாட்டு திறனுக்கான புதிய ஊக்கத்தை ஏற்படுத்தும் என கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.