மட்டக்களப்பு தேர்தல் அலுவலகத்தில் அதிர்ச்சி – பணியாளர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழப்பு.!!!
(மட்டக்களப்பு நிருபர்)
மட்டக்களப்பு தேர்தல் திணைக்கள அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று (30) காலை மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் மட்டக்களப்பு எருவில் பகுதியைச் சேர்ந்த பிரசாந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் நேற்று இரவு அலுவலகத்தில் சில பணிகளை நிறைவு செய்ய வேண்டியிருந்ததால் அங்கு தங்கி இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று காலை அலுவலகத்துக்குள் சென்ற காவலாளர், பிரசாந்தன் தூக்கில் தொங்கியிருந்ததை கண்டு உடனடியாக பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
பின்னர் சம்பவ இடத்துக்குச் சென்ற மட்டக்களப்பு பொலிசார், சடலத்தை மீட்டு மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
