உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

விசேட சுற்றிவளைப்பில்; 331 பேர் போதைப்பொருட்களுடன் கைது.!!!

நாடளாவிய ரீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (10) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 331 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஹெரோயின் போதைப்பொருளுடன் 94 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 119 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 114 பேரும், ஹேஷ் போதைப்பொருளுடன் 02 பேரும், கஞ்சா செடிகளுடன் 02 பேரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 98 கிராம் 901 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 198 கிராம் 826 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், 334 கிராம் 631 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளும், 05 கிராம் 080 மில்லிகிராம் ஹேஷ் போதைப்பொருளும், 348 கஞ்சா செடிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Related News

Total Websites Views

Total Views: 194689

Search

விளம்பரங்கள்