கடலில் மூழ்கிய 04 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை மீட்ட – இலங்கை கடற்படை.!!!
(கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ்)
மாத்தறை – மிரிஸ்ஸ கடலில் மூழ்கிக் கொண்டிருந்த நான்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இலங்கை கடற்படை உயிர்காப்பாளர்கள் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை (28) மிரிஸ்ஸ கடலோரத்தில் நடந்த இந்த நிகழ்வை, கடற்கரையில் பணியாற்றிய உயிர்காப்பாளர்கள் சிலர் நீரில் மூழ்கிவருவதை கவனித்து உடனடியாக மீட்பு நடவடிக்கை எடுத்தனர்.
மீட்கப்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் 13 முதல் 55 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், இரு பெண்கள் மற்றும் இரு ஆண்கள் எனவும், ரஷ்ய நாட்டு பிரஜைகள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடற்படை அதிகாரிகள், கடலோர பாதுகாப்பை மேம்படுத்தும் நடவடிக்கைகள் தொடரப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
