ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் அவசர அறிவிப்பு: டுபாய் விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்.!!!
மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.
டுபாய் வான்வெளி பகுதியளவில் மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு விமான சேவைகள் மீள இயக்கப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
📌 விமான விவரங்கள்:
கொழும்பு ➝ டுபாய் : UL 231
டுபாய் ➝ கொழும்பு : UL 232
அனைத்து விமானப் பயணங்களும் தேவையான முழுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இயக்கப்படும் எனவும் நிறுவனம் உறுதியளித்துள்ளது.
மேலதிக தகவல்களுக்கு பயணிகள் தங்களது பயண முகவரை அல்லது ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் அதிகாரப்பூர்வ இணையதளத்தை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.