மட்டக்களப்பு மாவட்டத்தை மையப்படுத்தி; புதிய கலை, இலக்கிய அமைப்பு உதயம்.!!!
மட்டக்களப்பு மாவட்டத்தில் கலை, இலக்கியத்துறையை மேம்படுத்தும் நோக்கில் புதியதொரு அமைப்பு நேற்று (27) தோற்றுவிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மகாஜனாக் கல்லூரியில் இடம்பெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில் மாவட்டத்தின் பல பிரதேசங்களிலிருந்தும் கவிஞர்கள், இலக்கியவாதிகள், கலைஞர்கள் அதிகளவில் கலந்து கொண்டிருந்தனர்.
தெரிவு செய்யப்பட்ட நிருவாக சபை:
தலைவர்: செங்கதிரோன் த.கோபாலகிருஷ்ணன்
துணைத் தலைவர்கள்: ஏ.எஸ்.பாய்வா, ரீ.எல்.ஜவ்பர்கான்
செயலாளர்: எஸ்.அருளானந்தம்
துணைச் செயலாளர்: வில்லூர் பாரதி(க.முரளீதரன்)
பொருளாளர்; ஜே.எழில் வண்ணன்
நிருவாக உறுப்பினர்களாக: வி.மைக்கல் கொலின், த.மலர்ச்செல்வன் , வி.கமலநாதன், த.சாந்திக்குமார், திருமதி ருத்ரகுமாரன், திருமதி நி.கிருஸ்ணராணி, சிவ.சற்குணானந்தம், சி.தரணீஸ்வராந்தா, த.சாந்திக்குமார் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.





