சிரேஷ்ட ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய எழுதிய “உயிர்த்த ஞாயிறு தாக்குதல்” நூல் மட்டக்களப்பில் அறிமுகம்.!!!
பத்மநாபா அறிவாற்றல் கழக ஏற்பாட்டில் சுனந்த தேசப்பிரிய எழுதிய “உயிர்த்த ஞாயிறு தாக்குதல்” ஆழ் அரசின் நிழலுருவும் தீர்க்கப்படாத மர்மங்களும் நூலானது கனடா வாழ் தோழர் மனோரஞ்சனினால் தமிழ்மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு நேற்று சனிக்கிழமை (20) மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் அறிமுகம்செய்யப்பட்டது.
தேசிய மக்கள் சக்தியின் காத்தான்குடி அமைப்பாளரும், கட்சியின் மாவட்ட நிறைவேற்றுக்குழு பணிப்பாளருமான எம்.பி.எம். பிர்தெளஸ் நளீமியின் தலமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், பிரதான உரையினை ஊடகவியலாளரும், நூலாசிரியருமான சுனந்த தேசப் பிரிய நிகழ்த்தினார்.
குறித்தநிகழ்வில் செல்லையா மநோரஞ்சன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுனரின் இணைப்புச் செயலாளர் உமர் அப்துல்லாஹ், சிவில் நிறுவன பிரதிநிதிகள், எழுத்தாளர்கள், சமூக சிந்தனையாளர்கள், ஊடகவியலாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட ஊடகவியலாளரும் நூலாசிரியருமான சுனந்த தேசப்பிரிய அவர்களுடன் கேள்வி பதில்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
















