உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

தாய் மற்றும் குழந்தைகளுக்கான; மாதாந்த சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு.!!!

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி முகத்துவார கிராமத்தின் வரலாற்றில் முதலாவது மாதாந்த தாய் மற்றும் குழந்தைகளுக்கான பரிசோதனை நிலையம் இன்று செவ்வாய்க்கிழமை (17) கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம் முஸம்மிலின் முயற்சியின் ஊடாக கற்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய ஏற்பாட்டில் சுகாதார வைத்தியர் எம் முர்சிதா தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

கற்பிட்டி முகத்துவார கிராம மக்களின் நீண்ட நாள் தேவையாக காணப்பட்ட தாய் மற்றும் குழந்தைகளுக்கான மாதாந்த பரிசோதனை சிகிச்சை நிலையம் தொடர்பில் கற்பிட்டி பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.ஆர்.எம் முஸம்மில் மேற்கொண்ட தொடர் முயற்சியின் ஊடாக கற்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரி தம்சிறியின் ஏற்பாட்டில் சுகாதார வைத்தியர் எம்.முர்சிதா தலைமையிலான தாதியர் குழுவின் பங்குபற்றுதலுடன் முதலாவது தாய் மற்றும் குழந்தைகளுக்கான மாதாந்த பரிசோதனை சிகிச்சை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related News

Total Websites Views

Total Views: 204405

Search

விளம்பரங்கள்