மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடைத்துறை அபிவிருத்திக்கு – 1300 மில்லியன் ஒதுக்கீடு.!!!
(ஜே.கே)
விவசாய கால்நடை அபிவிருத்தி அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்த்தில் கால்நடைத்துறை அபிவிருத்திக்காக 1300 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண விவசாய,கால்நடை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் எம்.அஸ்மி தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறந்த பண்ணையாளர்களுக்கான பணப்பரிசில்கள் பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் வைபவம் கால்நடை அபிவிருத்தி சுகாதார திணைக்கள பிரதி பணிப்பாளர் டாக்டர் எம்.அப்துல் ஹாதி தலைமையில் நடைபெற்றது.மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 60 பண்ணையாளர்கள் பணப்பரிசில்களையும், சான்றிதழ்களையும் பெற்றுக்கொண்டனர்.
கால்நடை அபிவிருத்தி சுகாதார திணைக்கள கிழக்கு மாகாண பணிப்பாளர் சுல்பிகார் அபூபக்கர், திணைக்களத்தின் கிழக்கு மாகாண திட்டங்களுக்கான நிபுணர் டாக்டர் மாஹிர் உட்பட அதிகாரிகள், பண்ணையாளர்களும் கலந்து கொண்டனர்.
மாடு, ஆடு, கோழி, புல் வளர்ப்பு பண்ணையாளர்களிடையே குறித்த போட்டி நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






