மட்டக்களப்பில் இராணுவ, பொலிஸ் விஷேட பாதுகாப்பு.!!!
(ஜே.கே)
மட்டக்களப்பு கொக்கட்டி சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்முனை பாலத்தின் நுழைவாயிலில் பொலிசாரும், இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர்
கொக்கட்டிச்சோலை பிரதேச சபை தவிசாளர் பொலிசாரிடம் விடுத்த வேண்டுகோளை அடுத்து பாதுகாப்பு காவலரன் நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
இப்பிரதேசத்தில் அதிகரித்து வரும் கசிப்பு விற்பனை மற்றும் கசிப்பு உற்பத்தி நடவடிக்கைகளை தடுப்பதற்காகவும் மாடுகள் களவாடுவதை தடுப்பதற்காகவும் குறித்த பாதுகாப்பு காவலரன் அமைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிய வருகிறது
கொக்கடிச்சோலை பிரதேசத்தில் இருந்து மன்முனை பாலத்தின் ஊடாக வெளியேறும் வாகனங்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான நபர்கள் இச் சோதனை சாவடியில் சோதனையிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




